Local

பிரதமர் மஹிந்த ராஜபக்ச தவறை ஒப்புக் கொண்டார்!

றம்புக்கணயில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூடு தொடர்பில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்தில் கலந்து கொள்ளாததன் தவறை பிரதமர் மகிந்த ராஜபக்ச ஒப்புக்கொண்டுள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய பாதுகாப்புச் சபை கூட்டத்திற்கு பிரதமர் அழைக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தை தெளிவுபடுத்திய பொது பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, பிரதமருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் அவரால் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாது என நாடாளுமன்றத்திற்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த பிரதமர் மகிந்த ராஜபக்ச, இந்தக் கூட்டத்திற்கு தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், ஆனால் அவர் அதில் கலந்துகொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

றம்புக்கண சம்பவம் தொடர்பான தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ளாதது தனது தவறு எனத் தெரிவித்த அவர், எவ்வாறாயினும், இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பில் தமக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள பாதை வரைபடம் குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அரசாங்கத்திடம் பல தடவைகள் கேள்வி எழுப்பிய போதிலும் அரச நிர்வாகம் இதுவரை பதில் வழங்கத் தவறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading