World

பேரூந்தில் கதவை மூடி எரித்த கும்பல் 33 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழப்பு!

மாலியில் பயங்கரவாதிகளால் பேருந்து தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவத்தில் 33 பேர் உடல்கருகி பரிதாபமாக பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் ஐ.எஸ், அல்கொய்தா ஆதரவு பயங்கரவாத குழுக்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த பயங்கரவாத குழுக்கள் பொதுமக்களை குறிவைத்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இந்த பயங்கரவாத குழுக்களை ஒடுக்கும் நடவடிக்கையில் அந்நாட்டு இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இராணுவத்திற்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே அவ்வபோது மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

இந்நிலையில், அந்நாட்டின் மொப்தி மாகாணம் சொவிரி நகரில் இருந்து பென்டிய்ஹரா நகருக்கு நேற்று பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த பேரந்தில் 40இற்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading