மக்களின் வரிப் பணத்தை திருடுவது நியாயமானதா?
ஒரு அரசியல்வாதி 61 வயதில், 20 ஆண்டுகள் சிறைக்குச் செல்ல வேண்டியிருந்தால், செல்வத்தால் என்ன பயன்? அவர் விடுவிக்கப்படும்போது அவருக்கு 81 வயது இருக்கும். அதன் பயன் என்ன? மக்களின் வரிப் பணத்தை திருடுவது நியாயமானதா? சமீபத்தில், மாத்தறை சிறைச்சாலையின் புனரமைப்புப் பணிகளின் போது, கைதிகளை அங்குணகொலபலாஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றும்போது, அவர்களிடம் இருந்து 7 கைவிலங்குகள் 28 சாவிகள் கண்டுபிடிக்கப்பட்டது. நாட்டில் வெள்ளை அமைப்புகளுக்குக் கீழே ஒரு கறுப்பு அமைப்பு இயங்குகிறது. மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட கறுப்புப் பொறிமுறை நம்முன் உள்ளது. இந்தக் கறுப்புப் பொறிமுறை உடைக்கப்படும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். அந்த கறுப்பு பொறிமுறையை அழிக்க நிச்சயமாக பாடுபடுவேன். அனைவரும் சட்டத்திற்கு உட்பட்டு இருக்கக்கூடிய சூழலை உருவாக்கப்படும்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று(02) நடைபெற்ற விழாவில் ஜனாதிபதி இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்l

You must be logged in to post a comment.