Gossip

மனைவி மீது சந்தேகம் கொண்ட கணவன் மனைவியின் பிறப்புறுப்பை காயப்படுத்தியுள்ளார்

மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் அவரது பிறப்பு உறுப்பை பசையால் கணவர் ஒட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கென்யா நாட்டில் வசித்து வருபவர் டென்னிஸ் முமோ (36). இவர் வேலை விஷயமாக அடிக்கடி வெளியூர் சென்று வருபவர். அதனால் மனைவியிடம் அதிக நேரம் செலவழிக்க முடியாமல் இருந்துள்ளது.
இதனால் முமோவின் மனைவி 4 ஆண்களுடன் தொடர்பில் இருந்துள்ளார். இந்த சம்பவம் முமோவுக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து வேலைக்கு செல்லும்முன் தனது மனைவியின் பிறப்பு உறுப்பை சூப்பர் க்ளூ என்ற பசையால் அடைத்துள்ளார்.
இதனை அடுத்து முமோவின் மீது அவரது மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் முமோவை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.
அதில், தன்னுடைய மனைவி அவரது ஆண் நண்பருக்கு நிர்வாணப் புகைப்படங்களை அனுப்பி உள்ளதை முமோ பார்த்துள்ளார். இதனால் தான் வேலைக்கு செல்லும்முன் மனைவியின் பிறப்பு உறுப்பை பசையால் அடைத்தாக ஒப்புக்கொண்டுள்ளார்.
பிறப்பு உறுப்பு பசை வைத்து அடைக்கப்பட்டதால் முமோவின் மனைவி சிறுநீர் கழிக்க முடியாமல் அவதிப்பட்டுள்ளார். இதனால் அவரின் உடல்நிலை மோசமாகியுள்ளது.
இதனை அடுத்து அவருக்கு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. இதனிடையே முமோவின் மனைவி மற்றொரு ஆண்களுடன் தொடர்பில் இருந்ததற்காக அவருக்கு 100 சவுக்கடி தண்டனை கொடுக்க வேண்டும் என முமோவின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading