மஸ்கெலியா பிளான்டேஷன் இயக்குனர் செந்தில் தொண்டமானுக்கும் மஸ்கெலியாக பிளான்டேஷனுக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தை தொழிலாளர்களுக்கு சாதகமாக முடிவு!
தீபாவளி முற்பணமாக 25ஆயிரம் ரூபாவை வழங்க பெருந்தோட்ட கம்மபனிகள் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமானிடம் இணக்கம் வெளியிட்டிருந்த போது, ஏனைய கம்பனிகள் தீபாவளி முற்பணமாக 25000 ரூபாய் வழங்கியிருந்த நிலையில், மஸ்கெலியாக பிளான்டேஷன் மாத்திரம் 20ஆயிரம் ரூபாவையே வழங்கியிருந்தது.
இந்த நிலையில், மஸ்கெலியாக பிளான்டேஷன் நிர்வாகத்துடன் செந்தில் தொண்டமான், நடத்திய பேச்சுவார்த்தையின் பிரகாரம் எதிர்வரும் திங்கட்கிழமை மிகுதி 5ஆயிரம் ரூபாவை வழங்குவதாக மஸ்கெலியா பிளான்டேஷன் உறுதியளித்தது.

You must be logged in to post a comment.