மீண்டும் பாராளுமன்றம் செல்கிறார் ரணில்?
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க
பொதுத் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்ற தேசியப்பட்டியல் ஆசனத்தின் ஊடாக மீண்டும் பாராளுமன்றத்துக்குள் பிரவேசிக்க தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, கட்சியின் இரண்டு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு நியமிக்கப்பட்ட இருவரில் ஒருவர் இராஜினாமா செய்யவுள்ளார்.
பின்னர் அந்த வெற்றிடத்துக்கு வேறு ஒருவரை நியமிப்பதற்கு சட்டத் தடை இல்லை என்றும் ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்படவுள்ளார்.

You must be logged in to post a comment.