முன்னைய அரசாங்கங்களை விடவும் தற்போதைய அரசு 20 மடங்கு அதிக பணத்தை அச்சிட்டுள்ளது!

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து ரூ. 149,905 கோடி அச்சிடப்பட்டதால் அன்றாட வாழ்க்கையில் பயன்படும் அனைத்துப் பொருட்களும்
நம்ப முடியாத அளவுக்கு விலைகள் அதிகரித்து வருவதாக ஊவா, மத்திய மற்றும் தென் மாகாணங் களுக்கான முன்னாள் ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
இந்த வருடத்தின் முதல் 25 நாட்களில் அரசு ரூ. 15,704 கோடியை அச்சிட்டுள்ளது.
ஜனவரி முதல் டிசம்பர் 2021 வரை மட்டும், அரசாங்கம் ரூ. 67,833 கோடி (678.33 பில்லியன்) அச்சிட்டுள்ளது. அதில் டிசம்பர் 31 அன்று அச்சிடப்பட்ட 66,500 மில்லியன் ரூபாவும் அடங்கும்.
அஜித் நிவார்ட் கப்ரால் மத்திய வங்கியாக நியமிக்கப்பட்ட பின்னரே ரூ. 28,942 கோடி அச்சிடப்பட்டுள்ளது. கப்ரால் ஆளுநராக பதவியேற்ற போது, மத்திய வங்கியின் அரசாங்கப் பத்திரங்களின் முகப் பெறுமதி ரூ. 1284.37 பில்லியனாகும். அது இன்று ரூ. 1574.79 பில்லியன் ஆகும்.
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த நாள் முதல் (ஜனவரி 2020) இன்று வரை ரூ. 149,905 கோடி (ரூ. 1,499.05 பில்லியன்) அச்சிடப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் பத்திரங்களின் முகப்பெறுமதி (ஜனவரி 25, 2022 இல்) ரூ. 1,573.79 பில்லியன் ஆகும்.
திறைசேரியின் செயலாளரின் வேண்டுகோளுக்கு இணங்க, மத்திய வங்கியின் ஆளுநர் பணத்தை அச்சிடுகிறார்.
இலங்கை மத்திய வங்கி ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர் தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வரும் வரை ரூ. 7474 கோடி மட்டுமே அச்சிடப்பட்டுள்ளது.எளிமையாகச் சொன்னால், மத்திய வங்கி அதன் தொடக்கத்திலிருந்து 2020 வரை அச்சிடப்பட்ட பணத்தைப் போல் கடந்த 25 மாதங்களில் 20 மடங்கு அதிகமாக அச்சிட்டுள்ளது.
“பணம் அச்சிடுவது கட்டுப்பாட்டில் இல்லை என்பது தெளிவாகிறது. 1950 முதல் இன்று வரை மத்திய வங்கியின் 14 ஆளுநர்களின் கீழ் அச்சிடப்பட்ட தொகையை விட தற்போதைய அரசாங்கத்தின் கீழ் 20 மடங்கு அதிகமாக அச்சிட்டுள்ளனர்.
“பணத்தை அச்சடிப்பதால், உலகிலேயே அதிக விலைவாசி உயர்ந்த நாடுகளில் ஒன்றாக இலங்கை மாறியுள்ளது. திறைசேரியின் செயலாளரும் மத்திய வங்கியின் ஆளுநரும் மத்திய வங்கியின் சிரேஷ்ட பொருளாதார நிபுணர்களின் ஆலோசனையின்றி தன்னிச்சையாக பணத்தை அச்சிடுகின்றனர்” என தென்னக்கோன் மேலும் தெரிவித்துள்ளார்.
