World

மோடிக்கு ரஷ்யாவின் மிகவும் உயர்ந்த குடிமகனுக்கான விருது!

இந்தியா – ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு இடையிலான நட்புறவை மேம்படுத்தியவர் எனத் தெரிவித்து பிரதமர் நரேந்திரமோடிக்கு ரஷ்யாவின் மிகவும் உயர்ந்த குடிமகனுக்கான விருது வழங்கப்படவுள்ளதாக ரஷ்ய  அறிவித்துள்ளது.

ரஷ்ய நாட்டின் உயரிய விருது, பிரதமர் மோடிக்கு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயேசுநாதரின் திருத்துாதர்களில் ஒருவராக கருதப்படும், செயின்ட் ஆன்ட்ரூ பெயரால், 17 ஆம் நுாற்றாண்டில், அப்போதைய, ரஷ்ய மன்னர் டிசார் பீட்டர் என்பவரால், ‘செயின்ட் ஆன்ட்ரூ அப்போஸ்தலர்’ விருது உருவாக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

நாட்டுக்கு மிகச்சிறப்பான சேவை செய்பவர்களை கௌரவிக்கும் வகையில், ரஷ்யா இந்த விருதை வழங்குகிறது. சிறிது காலம் நிறுத்தப்பட்ட இந்த விருது, 1998 முதல், மீண்டும் வழங்கப்படுகிறது. சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், கஜகஸ்தான் ஜனாதிபதி நர்சுல்தான் நசர்பாயேவ் ஆகியோருக்கு ஏற்கனவே இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே, இந்த ஆண்டுக்கான விருதுக்கு பிரதமர் மோடி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் மோடி, ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு தனது நன்றியைத் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading