Local

ரயில் டிக்கெட்டுகளுக்குப் பதிலாக Prepaid அட்டை!

ரயில் பயணச்சீட்டுக்குப் பதிலாக முன்பணம் செலுத்திய ரயில் அணுகல் அட்டையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

வரும் ஏப்ரலுக்கு முன் புதிய அட்டை அறிமுகம் செய்யப்பட உள்ளது.

கார்டுகளைப் பயன்படுத்தும் மக்கள் ஒவ்வொரு நிலையத்திலிருந்தும் அணுகும் வகையில் நவீன தொழில்நுட்பக் கருவி பொருத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

அதற்காக தனியார் நிறுவனத்துடன் இணைந்து செயற்பட ஆரம்பித்துள்ளதாக திணைக்களம் தெரிவிக்கின்றது.

இதன் மூலம் பயணிகளுக்கு சிறந்த சேவையை வழங்க முடியும் எனவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதே சமயம், சம்பந்தப்பட்ட ரயில்வே ப்ரீபெய்டு டிக்கெட்டை சரிபார்க்க அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading