World

விழுந்து நொருங்கிய விமானம் : பயணித்த அனைவரும் பலி

கென்யாவின் கடற்கரையிலிருந்து பயணித்த ஒரு சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது, அதில் 12 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

சுற்றுலா தலமான டயானியிலிருந்து மாசாய் மாரா தேசிய பூங்காவில் அமைந்துள்ள ஒரு தனியார் விமான ஓடுபாதையான கிச்வா டெம்போவுக்குச் செல்லும் வழியில், இன்று (28)செவ்வாய்க்கிழமை உள்ளூர் நேரப்படி அதிகாலை 5:30 மணியளவில் (0230 GMT) சிறிய விமானம் விபத்துக்குள்ளானது.

விமானத்தில் 12 பேர் இருந்தனர்

“விமானத்தில் 12 பேர் இருந்தனர்” என்று கென்யா சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் (KCAA) அறிக்கை தெரிவித்துள்ளது.

வெளிநாடொன்றில் விழுந்து நொருங்கிய விமானம் : பயணித்த அனைவரும் பலி | 12 Feared Dead In Kenya Light Aircraft Crash

விபத்துக்கான காரணத்தை நிறுவ அரசு நிறுவனங்கள் ஏற்கனவே சம்பவ இடத்தில் இருப்பதாக தெரிவித்த ஆணையகம் மேலதிக விவரங்களைத் தெரிவிக்கவில்லை.

கடந்த ஓகஸ்ட் மாதம், மருத்துவ அரசு சாரா நிறுவனமான அம்ரெஃப்-க்கு சொந்தமான ஒரு இலகுரக விமானம் தலைநகர் நைரோபியின் புறநகரில் விபத்துக்குள்ளானது, ஆறு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் இரண்டு பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading