World

வெடித்துச் சிதறிய குளிர்சாதனப்பெட்டி : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் தீயில் கருகி பலி

இந்தியாவின் கர்நாடக மாநிலம் பெலகாவியில் , நள்ளிரவில் வீட்டில் இருந்த குளிர்சாதனப் பெட்டி பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று செவ்வாய்க்கிழமை (15) அதிகாலை சுமார் 2 மணியளவில், வீட்டில் வைக்கப்பட்டிருந்த குளிர்சாதனப் பெட்டி திடீரென வெடித்துச் சிதறியது.இதனால் மளமளவென வீடு முழுவதும் தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.

பட்டாசு வெடிப்பதாகவே நினைத்த அயலவர்கள்

வீடு ஒரு சிறிய ஷெட் போன்ற அமைப்பில் இருந்ததால், உள்ளே தூங்கிக் கொண்டிருந்தவர்கள் தப்பித்து வெளியே வர வழியின்றி தீ மற்றும் அடர்ந்த புகைக்குள் சிக்கிக்கொண்டனர்.

நள்ளிரவில் வெடித்துச் சிதறியது குளிர்சாதனப்பெட்டி : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் தீயில் கருகி பலி | Karnataka Fridge Blast Fire Four Dead

விநாயகர் சதுர்த்தி பண்டிகை ஊர்வலங்கள் மற்றும் கொண்டாட்டங்கள் நகரில் தீவிரமாக நடைபெற்று வந்ததால், குளிர்சாதனப் பெட்டி வெடித்த பெரும் சத்தத்தை அயலவர்கள் முதலில் பட்டாசு வெடிப்பதாகவே நினைத்தனர்.

ஆனால், சில நிமிடங்களிலேயே வீட்டில் இருந்து புகை மூட்டமும் தீப்பிழம்புகளும் வெளியேறுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்து விரைந்து சென்றனர். சம்பவ இடத்திலேயே கஜானன் தாமோனே (65), சாரதா தாமோனே (45), பாரதி தாமோனே (50) மற்றும் ரோஷன் தாமோனே (21) ஆகியோர் உயிரிழந்தனர்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading