வெப்பத்தைத் தணிக்க சீனாவின் புது கண்டுபிடிப்பு..!!
வெப்பத்தை தணிக்க சீனா கண்டுபிடித்த புதிய வழி! சாலைகளில் செயற்கை பனிமழை… நொடியில் குளிரும் நகரங்கள்!
மக்கள் அருகிலுள்ள ஏசி அறையை நோக்கி ஓடுவதற்குப் பதிலாக, காற்றில் பரவும் லேசான பனிமூட்டம் போன்ற நீர் துகள்களுக்கு இடையே நடந்து சென்று உடனடியாகக் குளிர்ச்சியை உணர்கிறார்கள்.
இதுதான் இப்போது சீனாவின் பல நகரங்களில் நிஜமாக நடந்து கொண்டிருக்கிறது. அங்குள்ள சிறப்பு ‘மிஸ்டிங்’ அமைப்புகள் மிக நுண்ணிய நீர் துளிகளை காற்றில் தெளிக்கின்றன. இந்த நீர் ஆவியாகும்போது, அது காற்றில் உள்ள வெப்பத்தை அப்படியே உறிஞ்சி எடுத்துக் கொள்கிறது.
இந்த அமைப்புகள் இருக்கும் இடங்களில் சுற்றியுள்ள காற்றின் வெப்பநிலை உடனடியாக 6°C வரை குறைவதாகவும், சில சமயங்களில் கடுமையான வெப்ப அலையின்போது இதைவிட அதிகமாகக் குறைவதாகவும் ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. வெறும் தண்ணீரும், அடிப்படை இயற்பியலும் மட்டுமே இதற்குக் காரணம். இது ஒரு எளிய யோசனை தான், ஆனால் கொளுத்தும் கோடை வெப்பத்தின்போதும் மக்கள் வெளியில் நடமாடுவதை இது சாத்தியமாக்குகிறது.
இதில் எந்தவித இரசாயனங்களும் பயன்படுத்தப்படுவதில்லை, பெரிய அளவில் மின்சாரக் கட்டணமும் வருவதில்லை; ஆவியாதல் என்ற இயற்கை நிகழ்வை மட்டுமே மிகவும் சாதுரியமாகப் பயன்படுத்துகிறார்கள். மக்கள் அதிக அளவில் கூடும் வெளிப்புறப் பகுதிகள், பேருந்து நிறுத்தங்கள் மற்றும் பொது இடங்களில் அதிகரித்து வரும் வெப்பத்தைச் சமாளிக்க நகரங்கள் இப்போது இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகின்றன. உலகெங்கிலும் உள்ள மற்ற நகரங்களும் இதே போன்ற ஒரு யுக்தியைக் கையாண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

You must be logged in to post a comment.