Local

20ஆவது திருத்தச்சட்டமூலத்திற்கு எதிரணி 20 எம்.பிக்கள் ஆதரவு!

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு ஆதரவளிப்பதற்காக எதிரணியைச்சேர்ந்த 20 எம்.பிக்கள் அரசாங்கத்துடன் இணையவுள்ளனர் என்று அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

” அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலம் திருத்தியமைக்கப்படும். அது தொடர்பில் எதிர்க்கட்சிகள் திருத்தங்களை முன்வைக்கலாம். அதனைவிடுத்து போராட்டங்களை முன்னெடுப்பதற்கு பொருத்தமற்ற நடவடிக்கையாகும்.
இன்று எதிரணி பக்கம் இருப்பவர்களில் 20 பேர் ’20’ ஐ ஆதரிக்கவுள்ளனர். அதற்கான பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. பெயர் விபரங்களை வெளியிடவிரும்பவில்லை.” -என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading