20ஆவது திருத்தத்திற்கு ஆதரவளிக்க முடியாது மைத்திரி அதிரடி!

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் நாடாளுமன்றில் நிறைவேற நடக்கும் வாக்கெடுப்பில் தம்மால் வாக்களிக்க முடியாதென முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, ஜனாதிபதி கோட்டாபய, பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
“19 ஆவது திருத்தத்தை கொண்டுவர முன்னிலையில் இருந்தவன் என்ற ரீதியில் மனச்சாட்சியின்படி என்னால் 20ஆவது திருத்தத்திற்கு வாக்களிக்க முடியாது. அதற்காக வருத்தத்தை தெரிவிக்கிறேன்” என மைத்திரி தெரிவித்துள்ளார்
