Local

9 கோடி ரூபாய்களை செலவுசெய்து வளர்க்கப்பட்ட 23 ஆடுகள்

ஒன்பது கோடி ரூபாய் செலவில் தொடங்கப்பட்ட ஆடு வளர்ப்புத் திட்டத்தில் 23 ஆடுகள் மட்டுமே வளர்க்கப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறையின் 2023ஆம் ஆண்டுக்கான செயல்திறன் அறிக்கையில் தெரியவந்துள்ளது.

அதன்படி ஒன்பது கோடி செலவு செய்து கிடைத்த வருமானம் 23 லட்சம் ஆகும்.

இம்புலன்டாண்டா ஆடு வளர்ப்பு மையம் 2019 ஆம் ஆண்டு 50 போயர் வகை ஆடுகளுடன் ஐந்தாண்டுகளில் 250 ஆடுகளை வயலுக்கு விடுவதற்கான இனப்பெருக்கத் திட்டத்தை தொடங்கியுள்ளது.

ஆனால் 2023 இறுதிக்குள் 23 ஆடுகள் மட்டுமே வயலுக்கு விடப்பட்டுள்ளன. அதற்காக செலவிடப்பட்ட தொகை ரூ. 91,970,290 மற்றும் ஈட்டிய வருமானம் ரூ. 2,362,442 என்று அந்த அறிக்கையில் தெரியவந்துள்ளது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading