Cinema

மீண்டும் களமிறங்குகிறார் ‘கருவாப்பையா கார்த்திகா’

தூத்துக்குடி படத்தில் நாயகியாக நடித்து ‘கருவாப்பையா கருவாப்பையா’ என்ற பாடல் மூலம் இரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தைப் பிடித்தவர் நடிகை கார்த்திகா.

தொடர்ந்து பிறப்பு, ராமன் தேடிய சீதை, தைரியம், மதுரை சம்பவம், 365 காதல் கடிதம், வைதேகி, நாளைய பொழுதும் உன்னோடு போன்ற படங்களில் நடித்த கார்த்திகா தனது தங்கையின் படிப்புக்காக சிறிது காலம் மும்பையில் இருந்தார். தங்கையின் படிப்பு முடிந்து சென்னை திரும்பிய கார்த்திகா வடபழனியில் உள்ள பிரபல மால் திரையரங்கிற்கு படம் பார்க்க சென்றுளார்.

அங்கு அவரை அடையாளம் தெரிந்துகொண்ட இரசிகர்கள் ‘கருவாப்பையா கார்த்திகா’ என்று சூழ்ந்து கொண்டனர். தன்னை மறக்காத இரசிகர்களைக் கண்டு மகிழ்ச்சியடைந்த கார்த்திகா மீண்டும் திரைப்படங்களில் நடிக்கத் தயாராகிவிட்டார்.

பிரபல தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க அழைப்பு வந்தது. ஆனால், திரைப்படங்களில்தான் நடிப்பேன் என்று உறுதியாக இருக்கும் கார்த்திகாவை படங்களில் நடிக்க வைக்க சில இயக்குநர்களும் பேசி வருகின்றார்கள். நல்ல கதை அம்சம் கொண்ட, தனக்கு நல்ல கதாபாத்திரங்கள் நிறைந்த படங்கள் என்றால் நடிக்கத் தயாராக உள்ளதாகக் கூறுகின்றார் கார்த்திகா.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading