Lead NewsLocal

வன்முறையாளர்களைச் சுட உடன் உத்தரவு பிறப்பிக்குக! – ரணிலிடம் ஹக்கீம், ரிஷாத் கூட்டாகக் கோரிக்கை

குருணாகல் மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக மிகப்பெரும் வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள நிலையில், வன்முறையாளர்களைச் சுட்டு வீழ்த்த படையினருக்குப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உடன் உத்தரவிட வேண்டும் என்று அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன் ஆகியோர் கூட்டாக வலியுறுத்தினர்.

நேற்று மாலை அலரி மாளிகைக்குச் சென்ற அமைச்சர்கள், “குருநாகலில் அப்பாவி முஸ்லிம்கள் வன்முறையாளர்களினால் தாக்கப்பட்டுள்ளனர். அதனை முப்படையினரும் வேடிக்கை பார்த்துள்ளனர். எனவே, வன்முறையில் ஈடுபடுபவர்களைச் சுட்டு வீழ்த்த உடன் உத்தரவிடுங்கள்” என்று பிரதமரிடம் காட்டமாகத் தெரிவித்தனர்.

இதற்குப் பதில் வழங்கிய பிரதமர் ரணில், “உடனடியாக உயர்மட்ட பாதுகாப்புக் கூட்டத்தைக் கூட்டி அமைதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பேன்” என்று உறுதியளித்தார்.
.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading