இன்றிரவும் பொலிஸ் ஊரடங்கு!
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக, தொடர்ந்து இரவு நேரங்களில் அமுல்படுத்தப்பட்டு வரும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம், இன்றிரவும் அமுல்படுத்தப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர அறிவித்துள்ளார்.
இன்றிரவு 10 மணி தொடக்கம் நாளை அதிகாலை 4 மணி வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, சம்மாந்துறை, சவளக்கடை மற்றும் சாய்ந்தமருது ஆகிய பகுதிகளில் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
