ஐ.தே.கவினருக்கு ரணிலின் உத்தரவு!
ஐக்கிய தேசியக் கட்சியின் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்று மாலை நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
அரசாங்கத்துக்கு எதிராக, மக்கள் விடுதலை முன்னணியால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று மாலை 6.30 மணியளவில் நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ள நிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

