Local

பிரதமர் ரணிலுக்கு எதிரான வழக்கிலிருந்து மேன்முறையீட்டு நீதியரசர் தீபாலி விலகல்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை சவாலுக்குட்படுத்தி மேன்முறையீடு செய்யப்பட்ட மனுவை விசாரணை செய்யும் நீதியரசர்கள் குழாமிலிருந்து மேன்முறையீ்ட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவர் நீதியரசர் தீபாலி விஜேசுந்தர விலகியுள்ளார்.

தனிப்பட்ட காரணங்களுக்காகவே இவர் இதிலிருந்து விலகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு நகர சபையின் பெண் உறுப்பினர் ஒருவரால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை சவாலுக்குட்படுத்தி செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading