தமிழ் மக்களை இனியும் அரசு ஏமாற்ற முடியாது! – போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் என்கிறார் ஆளுநர்
“போர்க்குற்றங்களை இழைத்தவர்கள் எனச் சந்தேகத்திற்கப்பால் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என இராணுவத் தளபதி கூறியதுபோன்று குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்படவேண்டும்.”
– இவ்வாறு வலியுறுத்தினார் வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் இராகவன்.
“இலங்கை அரசு தன்னால் செய்யக்கூடிய நடவடிக்கைகளைக் காலம் தாழ்த்தாது முன்னெடுக்கவேண்டும். தமிழ் மக்களை இனியும் ஏமாற்ற முடியாது” என்றும் அவர் தெரிவித்தார்.
வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
