LocalWorld

பிரிட்டனிலும் 117 வாக்குகளால் வெற்றி! தப்பியது பிரதமர் பதவி!!

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறும் பிரெக்சிட் ஒப்பந்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரிட்டன் பிரதமர் தெரசா மே மீது நேற்று நடத்தப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பில் அவர் தப்பியுள்ளார். 117 வாக்குகள் பெற்று பிரதமர் பதவியை அவர் தக்கவைத்துக்கொண்டார்.

ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்த 28 உறுப்பு நாடுகள் அடங்கிய ஐரோப்பிய கூட்டமைப்பில் பிரிட்டனும் உள்ளது. இதில் இருந்து விலக பிரிட்டன் முடிவு செய்தது.

இது தொடர்பாக மக்கள் கருத்தை அறிய கடந்த 2016இல் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், கூட்டமைப்பில் இருந்து விலகுவதற்கு ஆதரவாக ஏராளமானோர் வாக்களித்தனர்.

இதை அடுத்து, பிரிட்டன் பிரதமராக தெரசா மே பொறுப்பேற்றார். இந்தநிலையில், ஐரோப்பிய யூனியனுடன் செய்துக் கொள்ள வேண்டிய எதிர்க்கால திட்டங்கள் குறித்த செயல் திட்ட அறிக்கையை பிரதமர் தெரசா தயாரித்து வந்தார்.

இதன் மீது அதிருப்தி அடைந்த ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்கள் 48 பேர் பிரதமர் தெரசா மே மீது ஹவுஸ் ஆப் காமன் எனப்படும் கீழ்ச் சபையில நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வந்தனர்.

இதன் மீது நேற்று மாலை இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இந்த வாக்கெடுப்பில் தெரசா மே வெற்றி பெற மொத்தமுள்ள 315 கன்சர்வேட்டிவ் எம்பிக்களில் 158 பேரின் ஆதரவு தேவை. இந்த வாக்கெடுப்பு தெரசா மே வெற்றி பெற்றால் அவர் மீது அடுத்த ஒரு ஆண்டுக்கு நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வர முடியாது.

குறித்த வாக்கெடுப்பில், மொத்தம் உள்ள 200 வாக்குகளில் 117 வாக்குகளைப் பெற்று பிரதமர் தெரசா மே வெற்றி பெற்றார்.

இந்த வெற்றி குறித்து கருத்துத் தெரிவித்த தெரசா மே, “எதிர்க்கட்சிகளால் நெருக்கடி வந்தாலும் 2022 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தல் வரை பதவி விலகும் எண்ணமில்லை” – என்றார்.

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading