UAE அணுமின் நிலையத்தின் மீதான தாக்குதலுக்கு ஐநா பாதுகாப்பு சபை கண்டனம்
ஐக்கிய அரபு அமீரகத்தின் பராக்கா அணுமின் நிலையத்தின் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதல் சர்வதேச சட்டத்தை மீறும் செயல் என பாதுகாப்பு சபை குறிப்பிட்டுள்ளது.
இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பான தரப்பு குறித்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை எந்தவொரு நாட்டையும் பெயரிடவில்லை.
கடந்த வாரம் ஈராக்கிலிருந்து ஆறு ட்ரோன்கள் தங்கள் மீது ஏவப்பட்டதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்திருந்தது. அதில் ஒரு ட்ரோன் பராக்கா அணுமின் நிலையத்தை இலக்கு வைத்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

You must be logged in to post a comment.