Local

அனைத்து நீதிமன்றங்களுக்கும் இன்று முதல் ஜனவரி 7வரை விடுமுறை!

நாட்டிலுள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் புத்தாண்டு விடுமுறை வழங்கப்படவுள்ளது.
குறித்த விடுமுறை, இன்று (14)  வெள்ளிக்கிழமை முதல் ஜனவரி மாதம் 7ஆம் திகதி வரை வழங்கப்படவுள்ளது.

2019 ஆம் ஆண்டு  புத்தாண்டின் பின்னர் ஜனவரி 7 ஆம் திகதி முதல்  நாட்டின் சகல நீதிமன்றங்களும் மீண்டும் இயங்க ஆரம்பிக்கும்.

இதனால்தான்,  இலங்கையிலுள்ள உச்ச நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்கள் மிகவும் முக்கியான வழக்கின் மனுக்களை விரைவாக விசாரித்து வருவதாகத்  தெரிவிக்கப்படுகின்றது.இலங்கையிலுள்ள நீதிமன்றங்களுக்கு, ஒவ்வொரு வருட இறுதியிலும் இவ்வாறு விடுமுறை வழங்கப்பட்டு வருகின்றமை வழமையாகும்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading