Local

கொழும்பில் முகாமிட்டு மைத்திரி – மஹிந்த கூட்டணி தீவிர ஆலோசனை! நாளையும் இரண்டு கூட்டங்கள்!!

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள்  சுதந்திர முன்னணியின் நிறைவேற்றுக்குழுக் கூட்டம் நாளை ( 24) நடைபெறவுள்ளது.

முன்னணியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் காலை 8.30 மணிக்கு குறித்த கூட்டம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து புதியதொரு அரசியல் கூட்டணியைக் கட்டியெழுப்புவது சம்பந்தமாக இதன்போது பேசப்படலாம் என எதிர்பார்க்க்பபடுகின்றது.அத்துடன், அடுத்தக்கட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்படவுள்ளது.

சுதந்திரக்கட்சி, தேசிய  சுதந்திர முன்னணி, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஜனநாயக இடதுசாரி முன்னணி உள்ளிட்டவை ஐக்கிய மக்கள்  சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கின்றன.அதேவேளை, ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளர்களுக்கான கூட்டமும் நாளை நடைபெறவுள்ளது.

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading