Local

அம்மாக்கள் செய்த தவறு : அவர்களுடன் சேர்ந்து சிறையில் வாடும் குழந்தைகள்

2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து கடந்த 9 மாதங்களில் பல்வேறு குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்ட பெண்களுடன் 47 குழந்தைகள் சிறையில் இருப்பதாக சிறைச்சாலை தலைமையகம் தெரிவித்துள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து இந்தத் தகவலை சிறைச்சாலை தலைமையகம் வெளியிட்டுள்ளது.

47 குழந்தைகள் சிறையில்

பல்வேறு குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்ட பெண்களுடன் 47 குழந்தைகள் சிறையில் இருப்பதாக சிறைச்சாலை தலைமையகம் தெரிவித்துள்ளது.

அம்மாக்கள் செய்த தவறு : அவர்களுடன் சேர்ந்து சிறையில் வாடும் குழந்தைகள் | Children In Prison With Their Mothers

2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து கடந்த 9 மாதங்களில் இந்தக்குழந்தைகள் சிறையில் உள்ளனர்.அந்தக் குழந்தைகளில், 20 சிறுவர்களும் 27 சிறுமிகளும் அடங்குவர்.

2025 ஜனவரி 1 ஆம் திகதி முதல் செப்டெம்பர் (27) ஆம் திகதி வரையிலான 9 மாதங்களில், 1,483 பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இந்தப் பெண்களில், 229 பேர் தண்டனை பெற்ற கைதிகளாவர்.

7 மாதங்களில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பெண்கள்

ஜனவரி 1 ஆம் திகதி முதல் ஜூலை 31 ஆம் திகதி வரையிலான 7 மாதங்களில், போதைப்பொருள் குற்றங்களுக்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 184 ஆகும்.

அம்மாக்கள் செய்த தவறு : அவர்களுடன் சேர்ந்து சிறையில் வாடும் குழந்தைகள் | Children In Prison With Their Mothers

அவர்களில், 75 பேர் ஐஸ் குற்றத்திற்காகவும், 97 பேர் ஹெரோயினுக்காகவும், 8 பேர் கஞ்சா குற்றத்திற்காகவும், ஒரு பெண் ஓபியம் குற்றத்திற்காகவும், 3 பேர் பிற போதைப்பொருட்களுக்காகவும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு பல்வேறு குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 885, அவர்களில் 369 பேர் போதைப்பொருள் குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதில் 138 பேர் ஐஸ் குற்றங்களுக்காகவும், 199 பேர் ஹெரோயினுக்காகவும், 17 பேர் கஞ்சா குற்றங்களுக்காகவும், 14 பேர் பிற போதைப்பொருள் குற்றங்களுக்காகவும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

திருமணமான பெண்கள்

கடந்த ஆண்டு, 655 திருமணமான பெண்கள் பல்வேறு குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டனர், அதில் 278 பேர் போதைப்பொருள் குற்றங்களுக்காகவும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும், கடந்த ஆண்டு 98 திருமணமாகாத பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டனர், அதில் 65 பேர் போதைப்பொருள் குற்றங்களுக்காகவும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கைதிகளுக்கு அரசாங்கம் செலவிடும் தொகை

இருப்பினும், கடந்த ஆண்டு புள்ளிவிவரங்களின்படி, அரசாங்கம் ஒவ்வொரு கைதிக்கும் ஒரு நாளைக்கு ரூ. 1,411 மற்றும் ஒவ்வொரு கைதிக்கும் ஆண்டுக்கு ரூ. 516,352 செலவிடுகிறது.

அம்மாக்கள் செய்த தவறு : அவர்களுடன் சேர்ந்து சிறையில் வாடும் குழந்தைகள் | Children In Prison With Their Mothers

ஒவ்வொரு கைதியின் உணவுக்காகவும் அரசாங்கம் ஒரு நாளைக்கு ரூ. 697 செலவிடுகின்றது கடந்த ஆண்டுக்கு 255,174 ரூபாய்​ செலவிடப்பட்டுள்ளது. சிறைச்சாலைகள் தலைமையகத்திலிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, நாட்டில் அதிக மக்கள் தொகை கொண்ட மதத்தைச் சேர்ந்த 18,179 பேர் கடந்த ஆண்டு போதைப்பொருள் குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டனர்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading