ஆண்டுதோறும் சுமார் 33,000 புற்றுநோய் பாதித்தோர் அடையாளம்
நாட்டில் ஆண்டுதோறும் சுமார் 33,000 புதிய புற்றுநோய் நோயாளிகள் அடையாளம் காணப்படுவதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் ஆண்கள் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் சுமார் 19,000 பேர் புற்றுநோயால் உயிரிழப்பதாக சுகாதாரத் தரவுகள் குறிப்பிடுவதாக அமைச்சர் கூறினார்.

You must be logged in to post a comment.