World

ஆண் நண்பரை கொன்று நண்பர்களுக்கு விருந்து வழங்கிய பெண் கைது!

நீண்ட நாள் ஆண் நண்பரை கொன்று, அதை தனது நண்பர்களுக்கு பெண் ஒருவர் விருந்து ஆக்கிய நிகழ்வு, மொராக்கோ நாட்டில் நடந்துள்ளது.

30 வயதான அந்த பெண், தன்னை விட வயது குறைந்த இளைஞர் உடன், 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்பில் இருந்து வந்தார். அவன் , தன்னை திருமணம் செய்துகொள்வான் என்று நம்பியிருந்தவளுக்கு, அவனுக்கு வேறு இடத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டதை கண்டு அவள் அதிர்ச்சி அடைந்தாள்.
தன் எதிர்காலமே இவன்தான் என்று நினைத்திருந்த அந்த பெண், தனது ஆண் நண்பரை பழிவாங்க நினைத்தாள்.

அதற்காக நேரம் குறித்து காத்திருந்தாள். ஒருநாள் அந்த பெண்ணின் வீட்டிற்கு வந்த ஆண் நண்பரை கத்தியால் குத்தி கொலை செய்தாள். அவனின் உடலில் இருந்து சில பாகங்களை எடுத்து பஹ்ரைன் நாட்டின் பிரபல உணவான மச்போ சமைத்தார். இது இந்தியாவின் பிரியாணி போன்றது ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த உணவை, ஆண் நண்பர் வேலை செய்த கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்த நண்பர்களுக்கு விருந்து ஆக்கி அந்த பெண் மகிழ்ச்சி அடைந்தார்.

தங்களது மகன் மாயமான நிலையில், அவனது பெற்றோர், போலீசில் புகார் அளித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அந்த பெண், தனது ஆண் நண்பரை கொன்று, நண்பர்களுக்கு விருந்து படைத்த கொடூர நிகழ்வு, வெளிஉலகிற்கு தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம், அங்கு பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மொராக்கோ போலீசார், அந்த பெண்ணை கைது செய்துள்ள நிலையில், அவளிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading