Features

இஞ்சி டீ குடிப்பதால் பக்கவிளைவுகள் ஏற்படும்?

இஞ்சி உடலுக்கு ஆரோக்கியம் என்றாலும் அதனை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டால் ஆபத்து என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

அதிகமாக இஞ்சி டீயை பருகும் போது, வயிற்றுப் போக்கு, நெஞ்செரிச்சல், வாய் எரிச்சல் போன்ற பக்க விளைவுகள் ஏற்படும். இஞ்சியை மாத்திரை வடிவில் எடுத்துக் கொண்டால், இந்த பக்க விளைவுகளில் சிலவற்றை போக்க அது உதவிடும்.

இப்போது இஞ்சி டீயை அளவுக்கு அதிகமாக பருகினால் ஏற்படும் பக்க விளைவுகளை தெரிந்து கொள்ளுங்கள்.

  • நம் உடலின் தேவைப்பாட்டைப் பொறுத்து இஞ்சி டீயை குறைந்தே அளவிலேயே பருக வேண்டும். இதனால் செரிமான அமைப்பு பாதிக்கப்படும்.
  • நம் உடலில் அமில உற்பத்தியை அதிகரிக்க செய்து அசிடிட்டியை உண்டாக்கும். அதே போல் சர்க்கரை நோயால் அவதிப்படுபவர்களும் கூட இஞ்சி டீயை அதிகமாக பருகுவதை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைந்து ஹைபோகிளைசீமியா உண்டாகும்.
  • இஞ்சி டீயில் ஆஸ்பிரின் அல்லது ஐபூப்ரோஃபெனில் உள்ளது போலவே வலி நீக்கி உள்ளது. மேலும் உயர் இரத்த அழுத்தத்திற்காக மருந்து எடுத்துக் கொள்பவர்கள் கண்டிப்பாக இஞ்சி டீயை பருக கூடாது. அது இரத்த அழுத்தத்தை குறைத்து, இதய படபடப்பை உண்டாக்கிவிடும்.
  • இஞ்சி டீ குடிப்பதால் அமைதியற்ற மற்றும் தூக்கமற்ற நிலை உருவாகும். சிலருக்கு அது தூக்கத்தை கெடுப்பதால், படுக்க போகும் முன்பு இஞ்சி டீயை பெரும்பாலும் தவிர்க்கவும். ஏனெனில் பல மணிநேரத்திற்கு தூக்கம் வராமல் போகலாம். அதனால் உங்களுக்கு நெஞ்செரிச்சல் ஏற்பட்டு உயிருக்கே கூட அது ஆபத்தாய் முடியும்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading