இணையத்தில் நிதி மோசடி – 58 இலங்கையர்கள் கைது
இணையத்தில் நிதி மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 58 இலங்கையர்கள் அடங்கிய குழு ஒன்றை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேக நபர்கள் கிருலப்பனை அடுக்குமாடிக் குடியிருப்பில் வைத்துக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You must be logged in to post a comment.