இந்தியாவுடனான போட்டியை புறக்கணிக்க பாகிஸ்தான் தீர்மானம்!!
இலங்கை மற்றும் இந்தியாவில் நடைபெறவுள்ள ஐசிசி டி-20 உலகக்கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பங்கேற்பதற்கு அந்த நாட்டு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் சபை இந்த விடயத்தை சற்றுமுன்னர் எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும் எதிர்வரும் பெப்ரவரி 15 ஆம் திகதி இந்தியாவுக்கு எதிராக நடைபெறவிருந்த போட்டியில் மாத்திரம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி களம் இறங்காது என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

You must be logged in to post a comment.