Entertainment

இரண்டாவது திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்த சமந்தா?

திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்குபவர் நடிகை சமந்தா. இவர் விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படத்தில் சிறிய ரோலில் நடித்தார்.பின்னர் நானியுடன் ஈ படத்தில் நடித்து பெரிய அளவில் பேசப்பட்டார். இவர் தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சில வருடங்கள் எதுவித பிரச்சினையும் இன்றி அமைதியாகச் சென்ற திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.

இதனைத்தொடர்ந்து சினிமா, ஆன்மீகம் போன்றவற்றில் கவனம் செலுத்திய சமந்தா, கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது நோய்வாய்ப்பட்டு அதெிலிருந்து மீண்டும் வரும் சமந்தா, இரண்டாவது திருமணம் செய்ய தயாராகியுள்ளார் என கூறப்படுகிறது.

இந்நிலையில் ஆர்ஆர்ஆர் திரைப்பட தயாரிப்பாளர் டிவிவி தனய்யாவின் மகன் கல்யாணை திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் திருமணம் திகதி எல்லாம் போடப்பட்ட நிலையில் திருமண அழைப்பிதழ் ஒன்று இணையத்தில் வேகமாக பரவியது.

இறுதியில் இது வெறும் வதந்திதான் என தெரிந்துவிட்டது. மேலும் ஆர்ஆர்ஆர் திரைப்பட தயாரிப்பாளரின் மகன் கல்யாண் பிரசாந்த் வர்மாவின் இயக்கத்தில் உருவாகி வரும் ஆதிரா என்ற படத்தின் மூலமாக சினிமாவுக்குள் அறிமுகமாக உள்ளார்.

இப்படம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading