Cinema

இறப்பதற்கு முன் Instagram நேரலையில் அழுத இளம் நடிகை!

இறப்பதற்கு முன் Instagram நேரலையில் அழுத இளம் நடிகை ஓட்டல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

நடிகை அகன்ஷா தற்கொலை

போஜ்பூர் நடிகை அகன்ஷா துபே. இவருக்கு வயது 25. கடந்த 26ம் தேதி வாரணாசியின் சாரநாத் பகுதியில் உள்ள ஹோட்டல் அறையில் அகன்ஷா தூக்கில் பிணமாக தொங்கினார்.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தன் மகளின் மரணத்திற்கு காதலன் சமர் சிங் மற்றும் அவரது சகோதரர் சஞ்சய் சிங்கே காரணம் என்று அகான்க்ஷாவின் தாய் குற்றம் சாட்டியுள்ளார். இந்த புகாரையடுத்து, உத்தரபிரதேச மாநிலம் சாரநாத் போலீசார் சமர் சிங் மற்றும் அவரது சகோதரர் சஞ்சய் சிங் ஆகியோர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து இன்று அகன்ஷாவின் தாய் மது பேசுகையில், கடந்த சனிக்கிழமை மாலை அகான்க்ஷாவுடன் நான் தொலைபேசியில் பேசினேன். அவள் மகிழ்ச்சியாக இருந்தாள். என் மகள் மிகவும் தைரியமானவள். அவள் தற்கொலை செய்திருக்க முடியாது. என் மகளுக்கு நீதி வேண்டும் என்றார்.

Instagram நேரலையில் அழுத அகன்ஷா
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில்,

கடந்த இறப்பதற்கு முன், நடிகை அகன்ஷா இன்ஸ்டாகிராமில் நேரலையில் ரசிகர்கள் முன் வந்தார். அப்போது, அவர் ஏதும் பேசாமல் அழுது கொண்டிருந்தார். அப்போது ரசிகர்கள் ஏன் அழுகிறீர்கள் என்று கேள்வியும் கேட்டுள்ளனர். அதற்கு அவர் எந்த பதிலையும் கூறவில்லை.

இதற்கு மறுநாள்தான் அகன்ஷா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்களும், அவரது ரசிகர்களும் சோகத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading