Local

இலங்கைக்கான வானூர்தி சேவையை நிறுத்த சீனா முடிவு!

சில பயணிகள் கோவிட் வைரஸால் பாதிக்கப்பட்டமையை தொடர்ந்து, இலங்கைக்கான ஒரு வானூர்தியை ரத்து செய்து, மற்றொரு வானூர்தியை நிறுத்தி வைக்க சீனா முடிவு செய்துள்ளது.

கொழும்பிலிருந்து ஷாங்காய் செல்லும் சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸின் வானூர்திகள் ஜூலை 26 முதல் சீனாவின் பொது வானூர்தி போக்குவரத்து கட்டுப்பாட்டாளரால் இரண்டு வாரங்களுக்கு நிறுத்தப்படும் என்று ஷாங்காய் டெய்லி செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையின் கொழும்பிலிருந்து தென்மேற்கு சீனாவின் யுன்னான் மாகாணத்தில் உள்ள குன்மிங் வரை MU714 என்ற மற்றொரு வானூர்தியில் ஆறு பயணிகள் ஜூலை 6 ஆம் திகதி கோவிட் தொற்றுடன் கண்டறியப்பட்டமையை அடுத்து அந்த வானூர்தி நிறுத்தப்பட்டது என்று சீனாவின் பொது வான் போக்குவரத்து நிர்வாகம் இன்று தெரிவித்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading