இலங்கைக்கு வந்த விமானத்தை கடத்துவதாக கூறிய நபர் கைது!
இந்தோனேசியாவில் இருந்து இலங்கை வந்த விமானத்தை கடத்துவதாக தொலைபேசியில் பொய்யான தகவல் வழங்கிய 42 வயது நபரை வெள்ளவத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் விமான நிலைய பொலிஸாருக்கு முறைப்பாடு செய்துள்ளார். அரசாங்க விரோத முறைப்பாடாக இதனை பொலிஸார் பதிவு செய்துள்ளனர். வெள்ளவத்தை 33வது வீதியில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்த சந்தேக நபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

You must be logged in to post a comment.