Uncategorized

இலங்கையில் மற்றுமொரு கட்டணம் உயர்வு!

இலங்கையில் தனியார் பாதுகாப்பு நிறுவனங்களின் பதிவு மற்றும் புதுப்பித்தல் கட்டணத்தை உயர்த்தப்பட்டுள்ளது.

அதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆரம்ப பதிவுக் கட்டணமான 15,000 ரூபா 35,000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தமானி அறிவித்தலின்படி புதிய கட்டணம் 50,000 ரூபாவாகும்.

மேலும், பதிவு புதுப்பித்தல் கட்டணத்தை 15,000 ரூபாவினால் 10,000 ரூபாயில் இருந்து 25,000 ரூபாயாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தனியார் செக்யூரிட்டி ஏஜென்சியின் உரிமம் காலாவதியான முதல் மாதத்தில் தாமதக் கட்டணம் 10,000 ரூபாயாகவும், உரிமம் காலாவதியான 31 மற்றும் 90 நாட்களில் 25,000 ரூபாயாகவும் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், 90 நாட்களுக்குப் பிறகு தாமதக் கட்டணம் 35,000 ரூபாயாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இந்த திருத்தங்கள் கடந்த மாதம் 20ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் எனவும் வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading