இலங்கை மத்திய வங்கி வௌியிட்டுள்ள தகவல்!
இந்த ஆண்டு மே மாதத்தில் வெளிநாட்டில் உள்ள இலங்கை ஊழியர்களிடம் இருந்து பணம் அனுப்புவது 17.9 சதவீத வளர்ச்சியைக் காட்டுவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதன்படி, 2025 ஜனவரி முதல் மே வரை பெறப்பட்ட மொத்த பணப்பரிமாற்றங்கள் 3.1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஆண்டு மே மாதத்தில் சுற்றுலா வருவாய் 164 மில்லியன் அமெரிக்க டொலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளதாகவும், இதுவரையான காலப்பகுதியில் மொத்த சுற்றுலா வருவாய் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்படுவதாகவும் இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

You must be logged in to post a comment.