இளைஞர்கள் வாழ்வை சீரழிக்கும் போதைப்பொருள் பாவனை!
மனிதர்கள் இவ்வுலகில் பலவிதமான பழக்கவழக்கங்களுக்கு அடிமையாகின்றனர். அவற்றில் நல்லவையும் உள்ளன, தீயவையும் உள்ளன.
மனித வாழ்வை சீர்குலைக்கும் தீய பழக்கம்தான் போதைப்பொருள் பாவனை ஆகும். இப்பழக்கம் பலரு வாழ்க்கையை சீரழித்துக் கொண்டிருக்கின்றது. ஐஸ், அபின் கஞ்சா, ஹெரோயின் போன்ற போதைப் பொருட்களின் பாவனையினால் பலரதுவாழ்வு சீரழிந்து போயுள்ளது.
மேலும் இன்றைய காலத்தில் இளைஞர்கள் தமது பெற்றோர்களுடன் செலவிடும் நேரத்தை விட அதிக நேரம் தொலைத்தொடர்பு சாதனங்களிலேயே செலவிடுகின்றனர். இதன் காரணமாகவும் சில சந்தர்ப்பங்களில் சண்டை சச்சரவுகள் மற்றும் மனஅழுத்தம் ஏற்படுகின்ற சந்தர்ப்பத்தில் போதைப்பொருட்களுக்கு அடிமையாகின்றனர்.
குறிப்பாக வடக்கு, கிழக்கு போன்ற மாகாணங்களில் போதைவஸ்து பழக்கம் இன்றைய காலகட்டத்தில் அதிகரித்து வருகின்றது.
மேலும் இன்றாய நாட்களில் பல உயிரிழப்புகளும் இப்பழக்கவழக்கத்தினால் இடம்பெறுகின்றன.
தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த பழக்கவழக்கங்களிலிருந்து மக்களை காப்பாற்றுவதற்காக அரசு மற்றும் அரசு சார்பற்ற திணைக்களங்களின் பங்களிப்புடன் புணர்வாழ்வு மையங்களை அமைத்து அதன் ஊடாக பல சிகிச்சை நடைமுறைகளை நடத்தி வருகின்றனர்.
மேலும் இதுதொடர்பான விழிப்புணர்வு செயத் திட்டங்களும் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You must be logged in to post a comment.