World

ஈரானில் ஒரே இரவில் தாக்கப்பட்ட 150 இலக்குகள்!

இஸ்ரேல் நூற்றுக்கணக்கான வெடிமருந்துகளைப் பயன்படுத்தி ஈரானில் உள்ள 150 இலக்குகளைத் தாக்கியுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறித்த இஸ்ரேலிய தாக்குதல்கள் ஈரானிய அணுசக்தித் திட்டத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இஸ்ரேலிய இராணுவம் வெள்ளிக்கிழமை ஈரானின் உயர்மட்ட அதிகாரிகள், இராணுவ தளங்கள் மற்றும் அணு விஞ்ஞானிகளுக்கு எதிராக ஒரு நடவடிக்கையைத் தொடங்கியது.

மிகப்பெரிய இராணுவ விரிவாக்கங்கள்

இது சமீபத்திய தசாப்தங்களில் மத்திய கிழக்கில் நடந்த மிகப்பெரிய இராணுவ விரிவாக்கங்களில் ஒன்றாகும்.

நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹானில் உள்ள ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல்கள் தளங்களை “குறிப்பிடத்தக்க அளவில்” சேதப்படுத்த முடிந்தது என்று பாதுகாப்புப் படை அதிகாரி கூறியுள்ளார்.

ஈரானில் ஒரே இரவில் தாக்கப்பட்ட 150 இலக்குகள்! | 150 Targets Hit Iran Overnight

அந்த அதிகாரியின் கூற்றுப்படி, இஸ்பஹான் நிலையத்தில் ஈரான் ” அணு குண்டு வீசுவதற்கு முன்னேறி வருகிறது ” என்ற “உறுதியான உளவுத்துறை” இஸ்ரேலிடம் இருந்தது என தெரிவித்துள்ளார்.

ஈரான் அதன் அணுசக்தி திட்டம் அமைதியான நோக்கங்களுக்காகவே என்று பலமுறை கூறி வருகிறது, எனினும் ஈரான் அணுகுண்டை உருவாக்கவில்லை என்பதை மறுத்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading