ஈரானுக்கு பணத்தாசை காட்டி பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் அமெரிக்கா
ஈரானுடன் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு விரும்பும் அமெரிக்கா முதலீடு, முடக்கப்பட்ட நிதிகளை விடுவித்தல் உள்ளிட்ட ஆசையைத் தூண்டும் விடயங்களை முன்வைத்துள்ளது.
ரகசியமாக ஈரானுடன் பேச்சு
அத்துடன், பொதுநலனுக்கான அணுசக்தி திட்டத்தில் பல பில்லியன் டொலர் முதலீடு உள்ளிட்டவையும் வாக்குறுதி அளித்துள்ளது. இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே சமீபத்திய இராணுவத் தாக்குதல்கள் இருந்தபோதிலும் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்ததாக கூறப்படுகிறது.

வெளியான தகவல்களின் அடிப்படையில், அமெரிக்க அதிகாரிகளும் மத்திய கிழக்கு அமைச்சர்கர்களும் ரகசியமாக ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையிலேயே 20 முதல் 30 பில்லியன் டொலர் வரையில் பொதுநலனுக்கான அணுசக்தி திட்டத்தில் முதலீடு, தடைகளை நீக்குதல் மற்றும் வெளிநாடுகளில் முடக்கபப்ட்டுள்ள நிதியில் இருந்து 6 பில்லியன் டொலர் வரையில் பயன்படுத்தும் அனுமதி உள்ளிட்டவையை அமெரிக்கா முன்வைத்துள்ளது.

You must be logged in to post a comment.