World

உலகத்தை மிரட்ட தயாராகிறது புதிய போர் விமானம்!

ஜப்பான், இத்தாலி மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் இணைந்து புத்தம் புதிய போர் விமானத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளன.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஜப்பான் மற்றும் வெளிநாட்டு நாடுகளால் மேற்கொள்ளப்படும் முதல் பாதுகாப்பு சாதன தயாரிப்பு திட்டமாக இது கருதப்படுகிறது.

டெம்பெஸ்ட் என்ற திட்டத்தின் மூலம் 2035 ஆம் ஆண்டுக்குள் புத்தம் புதிய போர் விமானத்தை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பிரிட்டனின் BAE Systems PLC, ஜப்பானின் Mitsubishi Heavy Industries மற்றும் இத்தாலியின் Leonardo ஆகியவை இணைந்து விமானத்தை வடிவமைக்கின்றன.

இந்த விமானம் மிகவும் மேம்பட்ட டிஜிட்டல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு மற்றும் சைபர் போர் திறன்களை உள்ளடக்கியதாக இருக்கும்.

ஜப்பான், இத்தாலி மற்றும் பிரிட்டன் ராணுவ பலத்தை மேம்படுத்த ரஷ்யா மற்றும் சீனா எடுக்கும் நடவடிக்கைகளுக்கு தயாராகும் நடவடிக்கையாக இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக வர்ணனையாளர்கள் கூறுகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading