Local

உளுந்து வடைக்குள் கரப்பான் பூச்சி!

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல சைவ உணவகம் ஒன்றில் விற்பனை செய்யப்பட்ட உளுந்து வடை ஒன்றில் கரப்பான் பூச்சி காணப்பட்டதுடன், அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் உள்ள சிவன் கோவிலடி பகுதியில் உள்ள சைவ உணவகம் ஒன்றில் உள்ளூர்வாசி ஒருவர் வடை ஒன்றை வாங்கி, அங்கிருந்து இந்த கரப்பான் பூச்சி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வடையை வாங்கிச் சென்றவர் அதனை வீட்டுக்கு எடுத்துச் சென்று, உண்பதற்கு தயாரான போது அதனைப் பார்த்து, யாழ்.மாநகரசபை சுகாதார பரிசோதகர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அதன்படி செயற்பட்ட யாழ்.மாநகரசபையின் சுகாதார பரிசோதகர்கள் கடைக்கு சென்று இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading