World

எண்ணெய் ஏற்றுமதி தொடர்பில் ஈரானின் கடுமையான எச்சரிக்கை!

ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்க கடற்படை மற்றும் விமானம் தாங்கி கப்பலான ஜெரால்ட் ஃபோர்டு ஆகியவை எதிர்பார்க்கப்படுவதாக ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் அலி முகமது நைனி தெரிவித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த அறிவிப்பு மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றமான சூழ்நிலையை மேலும் அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

போர் முடிவின் தீர்மானம்

ஹார்முஸ் ஜலசந்தியின் பாதுகாப்பு மற்றும் போரின் காலம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட அறிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக இந்த கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

எண்ணெய் ஏற்றுமதி தொடர்பில் ஈரானின் கடுமையான எச்சரிக்கை! மேலும் அதிகரிக்கும் பதற்றம் | Issues Stern Warning Over Oil Exports

போர் எப்போது முடிவடையும் என்பதை வாஷிங்டன் அல்ல, தெஹ்ரான் தீர்மானிக்கும் என்றும், அது “ஈரானின் கைகளில்” இருப்பதாகவும் நைனி கூறியுள்ளார்.

அமெரிக்க போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்கள் ஏற்கனவே இப்பகுதியை விட்டு வெளியேறிவிட்டதாகவும், ஈரானிய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களைத் தவிர்க்க 1,000 கிலோமீட்டருக்கும் அதிகமான தொலைவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

ஈரான் கடுமையான எச்சரிக்கை

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்கள் தொடர்ந்தால், இந்தப் பிராந்தியத்திலிருந்து ஒரு லிட்டர் எண்ணெயை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கமாட்டோம் என்று ஈரான் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

எண்ணெய் ஏற்றுமதி தொடர்பில் ஈரானின் கடுமையான எச்சரிக்கை! மேலும் அதிகரிக்கும் பதற்றம் | Issues Stern Warning Over Oil Exports

இருப்பினும், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் போக்குவரத்தை ஈரான் சீர்குலைத்தால், அது “மிகக் கடுமையான விளைவுகளை” எதிர்கொள்ள நேரிடும் என்றும், அமெரிக்காவின் கடுமையான தாக்குதல்களை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading