Local

ஒரு மாதமாவது மக்கள் கொழும்பில் தங்கி போராட வேண்டும்!

” ஒவ்வொரு மாதத்திலும் 9 ஆம் திகதி மட்டுமல்ல, ஒரு மாதமாவது, மக்கள் கொழும்பில் தங்கியிருந்து போராட வேண்டும்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற அரசியல் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” நாட்டுக்காக போராடிய இளைஞர்களை வேட்டையாடி, அவர்களை சிறையில் அடைப்பதற்கே தற்போது முன்னுரிமை வழங்கப்படுகின்றது.

காலி முகத்திடலில் மட்டுமே போராட்டக்காரர்கள் இருப்பதாக அரசு நம்புகின்றது. ஆனால் நாடு முழுவதும் போராட்டக்காரர்கள் உள்ளனர். மக்கள்தான் போராட்டத்தின் பங்குதாரர்கள். எனவே, சிறையில் அடைப்பதன் மூலம் மக்கள் புரட்சியை ஒடுக்க முடியாது.

மக்கள் போராட்டத்துக்கு தலைமைத்துவம் வழங்க நான் தயார். ஒரு நாளுக்கு மட்டுமல்ல, ஒரு மாதமாவது கொழும்பில் தங்கியிருந்து, நாட்டை மீட்க மக்கள் முன்வர வேண்டும்.” எனவும் பொன்சேகா அழைப்பு விடுத்தார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading