கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 20,000 மின்னல் தாக்குதல்கள் பிரான்சில் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
பரிஸ் மற்றும் அதன் புறநகரங்களில் திடீர் மழை பெய்தது. இரு வாரங்களுக்கான மழையை ஒரு சில நிமிடங்களில் கொட்டித்தீர்த்து வெள்ளம் ஏற்பட்டது. அதேவேளை, நேற்று ஒரே நாளில் 20,000 மின்னல் தாக்குதல்கள் பதிவாகியுள்ளன.
பரிஸ், Toulouse மற்றும் Burgundy ஆகிய நகரங்களில் இந்த மின்னல் தாக்குதல்கள் அதிகளவில் பதிவாகியுள்ளன.