Local

ஒவ்வொரு வருடமும் கொடுட் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் அபாயம்!

கொவிட் தடுப்பூசி மூலம் கொவிட் பரவலை சாதாரண தடுமன் காய்ச்சல் நிலைமைக்கு ஏற்படுத்துவதற்கே முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நீலிகா மலவீகே (Neelika Malavige) தெரிவித்துள்ளார்.

தற்போது வரையில் உலகின் முதன்மை மாறுபாடாக டெல்டா மாறியுள்ளது. ஏனைய அனைத்து மாறுபாடுகளும் நூற்றுக்கு ஒரு வீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.

எதிர்காலத்தில், ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட குழுக்களுக்கு கொவிட் தடுப்பூசி கொடுக்கப்பட வேண்டிய நிலைமை ஏற்படலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading