கஞ்சாவில் பல் துலக்கும் இலங்கை இராஜாங்க அமைச்சர்!

இலங்கையில் கஞ்சாவினால் செய்யப்பட்ட பற்பசையை தற்போது பல் துலக்க பயன்படுத்துவதாக சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
கஞ்சா பலவிதமான பொருட்களை உற்பத்தி செய்யக்கூடிய ஒரு ஔஷதம்.
இலங்கையில் கஞ்சாவை பானமாக பயன்படுத்த தாம் ஒருபோதும் முன்மொழியவில்லை.
அதனை ஏற்றுமதி பயிராக வளர்த்து இலங்கைக்கு டொலர்களை கொண்டு வருமாறும் அரசாங்கத்திற்கு பரிந்துரைத்துள்ளதாகவும் தான் போதைப்பொருளுக்கு எதிரானவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
