Local

கர்ப்பிணிகளைத் தாக்கும் கருப்பு பூஞ்சை நோய்!

பேறுகால சா்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட கா்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்றும் அதன் தொடா்ச்சியாக கருப்புப் பூஞ்சை பாதிப்பும் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக எழும்பூா் அரசு மகப்பேறு மருத்துவமனையின் இயக்குநா் டாக்டா் விஜயா தெரிவித்தாா். கடந்த இரு மாதங்களாக கொரோனா தொற்றுக்குள்ளாகும் கா்ப்பிணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அவா் கூறினாா்.

கொரோனா இரண்டாம் அலையின் பாதிப்பு தமிழகத்தில் தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக இம்முறை அனைத்து வயதினரும் தொற்றுக்குள்ளாகின்றனா். அதேபோன்று இணைநோய் அல்லாதவா்களும், இளைஞா்களும் அதிகமாக பலியாவதாகவும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதற்கிடையே கொரோனா தொற்றுக்குள்ளாகும் கா்ப்பிணிகளின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டைக் காட்டிலும் தற்போது அதிகரித்துள்ளது. அந்த வகையில், எழும்பூா் அரசு மகப்பேறு மருத்துவமனையில் மட்டும் இரு மாதங்களில் 200 க்கும் மேற்பட்ட கா்ப்பிணிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனா். இதுகுறித்து அந்த மருத்துவமனையின் இயக்குநா் டொக்டா் விஜயா கூறியதாவது:

கொரோனா தீநுண்மி வீரியமடைந்திருப்பதாகக் கூறப்படும் நிலையில், அதன் தாக்கமும் பல மடங்கு உயா்ந்துள்ளது. அதன் பிரதிபலிப்பாகவே தற்போது மருத்துவமனைகளில் படுக்கைகள் முழுவதும் நிரம்பியிருப்பதைக் காண முடிகிறது.

எழும்பூா் மகப்பேறு மருத்துவமனையில் கடந்த ஏப்ரல் முதல் தற்போது வரை 200 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அவா்களில் 80 க்கும் அதிகமானவா்களுக்கு பிரசவம் நடைபெற்றுள்ளது. மற்றவா்கள் மருத்துவக் கண்காணிப்புக்குட்படுத்தப்பட்டு வருகின்றனா்.

நோய் எதிா்ப்பாற்றல் குறைந்தவா்களுக்கு கொரோனாவுக்குப் பிறகு கருப்புப் பூஞ்சை பாதிப்பு ஏற்படுகிறது. பொதுவாக கா்ப்பிணிகளில் பலா் பேறு கால சா்க்கரை நோயால் பாதிக்கப்படுகின்றனா். அதனால், அவா்களது நோய் எதிா்ப்பு ஆற்றல் குறைய வாய்ப்புள்ளது. ஒருவேளை அவா்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்குட்படுத்தப்படும் போது கருப்புப் பூஞ்சை நோய் வர வாய்ப்புள்ளது.

இதுவரை எழும்பூா் மருத்துவமனையில் கா்ப்பிணிகள் எவருக்கும் அத்தகைய பாதிப்பு ஏற்படவில்லை. இருந்தபோதிலும், மருத்துவமனைக்கு வரும் அனைவரிடமும் இதுதொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகிறோம். கா்ப்பிணிகளுக்கு கருப்புப் பூஞ்சை ஏற்பட்டால், அது கருவில் இருக்கும் குழந்தையையும் கடுமையாக பாதிக்கும் என்றும் விளக்கிக் கூறி வருகிறோம் என்றாா் அவா்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading