காலிமுகத்திடல் போராட்டத்தின் பின்னரும் திருந்தாத பெரமுன
காலி முகத்திடலில் இடம்பெற்ற போராட்டத்தின் பின்னரும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) உறுப்பினர்கள் பாடம் கற்கவில்லை, அவர்கள் தமது கட்சி பற்றி மாத்திரமே பேசுகின்றனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
பேராதனை பல்கலைக்கழக கால்நடை மருத்துவ பிரிவில் சிகிச்சை பெற்று மஹரகமவுக்கு கொண்டு செல்லப்பட்ட சீத்தா யானையை பார்வையிட சென்ற போது, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சிறி லங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் நாட்டை பற்றியோ மக்களை பற்றியோ பேசுவதில்லை என அவர் குறிப்பிட்டார்.

அவர்கள் விரும்புவது கட்சியை உயர்த்துவதுதான். எதிர்வரும் அதிபர் தேர்தலின் பின்னர் அவர்களின் கட்சி உண்மையான முடிவுகளைப் பெறும் என்றார்.
