World

குறைந்த ஊதியம் வழங்கும் முதலாளிகளை தண்டிக்க புதிய சட்டம்!

 

ஆஸ்திரேலியாவில் ஊழியர்களுக்கு தெரிந்தே குறைந்த ஊதியம் வழங்கும் முதலாளிகளை தண்டிக்கும் சட்டத்தில் புதிய திருத்தங்கள் இன்று மத்திய பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

இந்த திருத்தங்களில் அதிக அபராதம் விதிக்கப்படும் என்று பணியிட உறவுகள் அமைச்சர் டோனி பர்க் கூறினார்.

புதிய விதிகளில் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் $7.8 மில்லியன் அபராதம் ஆகியவை அடங்கும்.

சில பணியிட உரிமையாளர்கள் உரிய ஊதியத்தை வழங்குவதைத் தவிர்ப்பதற்காக பல சட்ட ஓட்டைகளைப் பயன்படுத்தி வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், இந்த சட்டத் திருத்தங்களால் சில பணியிடங்கள் மூடப்படும் என்று முதலாளிகள் மற்றும் கூட்டாட்சி எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

தொழிற்கட்சி அரசாங்கம் தொழிலாளர்களின் உரிமைகளை மட்டுமே கையாள்வதாகவும், முதலாளிகள் மிகுந்த சிரமத்தில் இருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading